06-01-2014
NEWS- NEW AIRLINE -MALINDO AIR

மதுரை ,06-01-2014,​மதுரையிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானச் சேவை வசதியை தெடங்குவது தொடர்பாக மலிண்டோ ஏர் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் திரு. யோகநாதன் முனியாண்டி மற்றும் தமிழ்நாடு இ டிக்கெட் ஏஜெண்டுகள் நலச்சங்கத்தின் செயலாளர் திரு. கண்ணன் ஆகியோர் மதுரை விமான நிலைய இயக்குநர் திரு. சங்கய்யா பாண்டியனை நேரடியாகச் சந்தித்து நோடி சேவைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோனை நடத்தினார்கள்.
             இந்த சந்திப்பு பற்றி திரு. யோகநாதன் முனியாண்டி அவர்கள் கூறுகையில் மலிண்டோ ஏர் நிறுவனம் ஏற்கனவே திருச்சியிலிருந்தும் டெல்லியிலிருந்தும் நேரடியாக மலேசியாவிற்கு விமான சேவையை தொடங்கிவிட்டதாகவும் இரு நாட்டு விமானசேவை ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் பன்நாட்டு விமான நிலையமாக சேர்க்கப்படாததால் மதுரையிலிருந்து விமானசேவை துவக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். எனவே மதுரை விமான நிலையத்தையும் ஒப்பந்தத்தில் சேர்க்கநமது சங்கத்தின் சார்பாக கோரிக்கை அளிகக்கப்பட்டுள்ளது.​

 

GoBack